இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இன்று தமிழ் சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
இதன்போது, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் குறிப்பிடுகையில், "ஒவ்வொரு இனமும் தன்னுடைய கலாசாரம், பண்பாடு,அடையாளம், வீரம், பொருளாதாரம், இருப்பு, கலாசாரம் தொடர்பாக ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு அடையாளம் இந்த தமிழ் சித்திரைப்புத்தாண்டு தமிழ்த்தேசிய இனத்தின் அடுத்த நகர்வு அரசியல் இருப்பு தாங்களே தங்களை ஆளக்கூடிய அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எமது கரங்களை இறுகப்பற்றி இலக்கு நோக்கி பயணிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam