கனடா செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கனடா செல்ல முயன்ற நபர் ஒருவர் நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 மில்லியன் ரூபா செலுத்தி தயார் செய்த போலி கனேடிய வீசாவுடன் குறித்த நபர் கனடா செல்ல முயற்சித்துள்ளார்.
கொழும்பை சேர்ந்த 34 வயதான பயணி நேற்று டுபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய விசா
புறப்படும் முணையத்தில் இருந்த குடிவரவு அதிகாரி, பயணியின் கனேடிய விசாவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் அடைந்து, அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையின் போது அந்த நபர் அதிகாரிகளிடம் தனது கனேடிய விசாவைத் தயாரிப்பதற்காக முகவருக்கு 2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri