கனடா செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கனடா செல்ல முயன்ற நபர் ஒருவர் நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 மில்லியன் ரூபா செலுத்தி தயார் செய்த போலி கனேடிய வீசாவுடன் குறித்த நபர் கனடா செல்ல முயற்சித்துள்ளார்.
கொழும்பை சேர்ந்த 34 வயதான பயணி நேற்று டுபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய விசா
புறப்படும் முணையத்தில் இருந்த குடிவரவு அதிகாரி, பயணியின் கனேடிய விசாவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் அடைந்து, அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையின் போது அந்த நபர் அதிகாரிகளிடம் தனது கனேடிய விசாவைத் தயாரிப்பதற்காக முகவருக்கு 2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri