பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
ஜனவரியாகும் போது அனைத்து பாடசாலைகளுக்கும் அச்சுப்புத்தகம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக பண வவுச்சர் வழங்க தீர்மானித்திருக்கிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம்.
பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தி முடித்திருக்கிறோம்.
கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விடைத்தாள் பதிப்பிடும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டதால் 3 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் உயர்தர பரீட்சை இந்த மாதம் ஆரம்பிக்கவே தீர்மானித்திருந்தோம்.

அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றபோதும் தற்போது படிப்படியாக ஸ்த்திர நிலைக்கு வருகிறது. அதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் பாடசாலைகளுக்கான அச்சுப்புத்தகங்களுக்காக 19 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அச்சுப்புத்தகம் அச்சிடும் நடவடிக்கை தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது ஜனவரியாகும் போது அனைத்து பாடசாலைகளுக்கும் அச்சுப்புத்தகம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 8இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக பண வவுச்சர் வழங்க தீர்மானித்திருக்கிறோம். அதேபோன்று ஆரம்ப பிரிபு மாணவர்களுக்கு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக 16 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan