தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாகரை வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் (Photos)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) சார்பில் கோரளைப் பற்று வடக்கு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு வாகரையில் நேற்று(27.01.2023)இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா கலந்துக்கொண்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வவுணதீவு பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உட்பட வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும், முறையான விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளல், தற்கால அரசியற் களச் சூழல் என்பன குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 31 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
