முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம்!
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (18.05.2025), முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,"2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள அரசாங்கம் நடத்திய இனவெறியாட்டத்தின் நினைவு நாள். உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மனதில் வடுவாய் பதிந்துவிட்ட இனவழிப்பின் துயர நினைவுகளை தமிழ்மக்கள் ஒருங்கிணைந்து நினைவுகூரும் நாள்.
மானுட இயற்கை அழிப்பு
2009 இல் இறுதி யுத்த காலப்பகுதியில் சிங்களப் படையால் நடத்தப்பட்ட கொடுமைகள் மனித குல வரலாறு வெட்கித் தலைகுனிய வேண்டியவை.
இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகில் எந்த பகுதியிலும். நடந்திராத பெரும் மானுட இயற்கை அழிப்பை இலங்கை அரச படைகள் தமிழீழ மண்ணில் நடத்தி முடித்திருந்தன.
ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை.
பெரும் குண்டுகள் பொழிந்தும் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தும் எங்கள் மக்கள் கொல்லப்பட்டனர். நடந்தவர்கள் மீதும், படுத்திருந்தவர்கள் மீதும், ஓடியவர்கள் மீதும், ஒழித்து இருந்தவர்கள் மீதும் கலைத்துக் கலைத்து சிறிலங்காவின் அரச படை கொடும் மனித வேட்டையை நிகழ்த்தியது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம்” என குறிப்பிட்டுள்ளது.








பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
