ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

Sri Lankan Tamils Election K.V.Thavarasha
By DiasA Apr 12, 2024 09:00 PM GMT
Report

இன்றைய அரசியல், பொருளாதார சூழமைகளில் தமிழ் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தவும், உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

காணி பிரச்சினை காரணமாக ஒருவர் கொடூரமாக அடித்து கொலை

காணி பிரச்சினை காரணமாக ஒருவர் கொடூரமாக அடித்து கொலை

ஜனாதிபதித் தேர்தல்கள்

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காலங்காலமாக நாங்கள் ஜனாதிபதித் தேர்தல்களில் யாரேனும் ஒரு பெரும்பான்மைக் கட்சியின் வேட்பாளரையே ஆதரித்து வந்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா | Tamil General Candidate In Presidential Election

ஆனால் அது எத்தகைய மோசமான முடிவென்பதை வரலாறு பட்டுணரச் செய்தபின்னும் கூட, இன்னும் அதிலிருந்து பாடம் கற்கத் தயாரற்றவர்களாகவே நாம் உள்ளோம். எமது இனத்தை அழித்த இறுதிப்போரை முன்னின்றி நடத்திய சரத் பொன்சேகாவையும், அந்த இறுதிப்போரின் கடைசி நாள்களில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த மைத்திரிபால சிறிசேனவையும், கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸவையும் ஆதரித்து கடைசியில் என்ன கண்டோம்?

அவர்கள் எங்கள் வாக்குகளைப் பெற்றுவிட்டு, சராசரிப் பேரினவாதப் போக்குடனேயே தமிழர் பிரச்சினைகளை அணுகினரே தவிர, எமது வாக்குகளும் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ற நன்றி சிறிதும் காட்டவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு வெளியானது

தமிழ் மக்களின் வாக்குகள்

இப்படி பேரினவாதக் கட்சி களமிறக்கும் வேட்பாளர்களுக்கு நம்பி வாக்களித்து ஏமாறுவதை இனியும் தொடர்வது இனத்தின் இருப்புக்கு ஆரோக்கியமல்ல. அப்படியானால் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி எழலாம். தமிழ்க் கட்சிகளால் ஒரு பொதுவேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழ்மக்களின் வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் கிடைத்தாலும் கூட அந்த வேட்பாளரால் வெற்றிபெற முடியாதென்பது வெளிப்படையானதே.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா | Tamil General Candidate In Presidential Election

ஆனாலும் அந்தத் தோல்வியிலும் நாம் சில வெற்றிகளை அடையமுடியும். தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும், தமிழ் மக்களின் அபிலாழசை இலங்கையின் பெரும்பான்மைப் போக்குக்கு மாறானது எனவும், உரிமைக்கான எமது ஒன்றுபட்ட வேட்கையையும் பொதுவேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் நாம் உணர்த்தமுடியும்.

அப்படி அவர்கள் உணராவிட்டாலும் அதுகுறித்து நாம் கவலையடையத் தேவையில்லை. ஏனெனில் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்களித்தாலும் ஏதும் அதிசயம் நிகழ்ந்துவிடப்போவதில்லையே? ஆனால் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், பேரினக்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்கும் கருத்து நிலையை தமிழ்மக்களிடம் சிலர் விதைக்க முனைகின்றனர்.

புதிய ஜனாதிபதி யார்! வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் நகர்வு

புதிய ஜனாதிபதி யார்! வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் நகர்வு

பேரினவாத ஆட்சியாளர்கள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கருதுகோள் முளையில் இருக்கும்போதே, அது ராஜபக்சக்களின் சதி என்று பதறுகின்றனர். தங்களின் திட்டங்கள் பாழாகிவிட்டமையும், கிடைக்கவேண்டிய வரப்பிரசாதங்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமுமே இந்தப் பதற்றத்துக்கு மிகமுக்கியமான காரணங்கள்.

ஆனால் உண்மையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணைசெய்கிறார்கள் என்பதே உண்மை, மீண்டுமொருமுறை மக்களைப் படுகுழிக்குள் தள்ளிவிடவே இவர்கள் எத்தனிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா | Tamil General Candidate In Presidential Election

எனவே இந்தத் திசைமாற்றல்களுக்கு எடுபடாமல், பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவோடு ஒன்றித்து, எமது உரிமைக்குரலை உலகறியச் செய்வதே காலப்பொருத்தம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே. தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து கட்சியே இறுதி முடிவெடுக்கும், அந்த முடிவு கடந்த காலங்களைப் போல மீண்டும் இருண்ட யுகத்துக்குள் எமதினத்தை மூழ்கடிக்காமல், ஒளிமயமானதாக, தீர்க்கமானதாக அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொட்டுக் கட்சி எதிர்ப்பு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொட்டுக் கட்சி எதிர்ப்பு

மைத்திரிக்கு எதிரான தடையை பயன்படுத்தி ரணிலை வெற்றிபெறச் செய்யும் முயற்சி

மைத்திரிக்கு எதிரான தடையை பயன்படுத்தி ரணிலை வெற்றிபெறச் செய்யும் முயற்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US