ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொட்டுக் கட்சி எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன்(Samagi Jana Balawegaya) உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ்(G.L.Peiris) மற்றும் ஏனையோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுவின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.
தேர்தல் ஒப்பந்தம்
இந்தநிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் அவர்கள் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டத்தில், ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, தமது கட்சியின் மூலம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வேறொரு கட்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
