நாடாளுமன்ற தேர்தலுக்கான நகர்வே தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் : ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

Sri Lanka C. V. Vigneswaran Sri Lanka Presidential Election 2024
By Theepan May 29, 2024 06:04 AM GMT
Report

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்திற்கொண்டே உதிரிகளாக உள்ள குழுக்களை ஒன்றிணைப்பதற்காக பொது வேட்பாளர் என்னும் நிலையை பயன்படுத்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் முற்படுகின்றனர் என ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம்

பொருளாதார வளர்ச்சி

மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம்.

tamil-candidate-combine-spares-strategy-election

இதனடிப்படையில் ஒற்றுமையை கொண்டுவர என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தபோது இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்தித்தோம் என விக்னேஸ்வரன் தெரிவித்ததன் மூலம் தமிழ் மக்களின் அரசியலுரிமை, அவர்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக இவர்கள் சிறிதளவும் சிந்திக்கவில்லை.

மாறாக தமது சுய நலன்களிலிருந்தே இன்னும் பயணிக்க முற்படுகின்றனர். இதன்மூலமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்கின்ற செய்தி எவ்வாறானது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

நாட்டின் நலன், மக்களின் நலன் மற்றும் பொருளாதார நலன் என்பவற்றிலிருந்து விலகி தமது கொள்கையற்ற கோட்பாடற்ற அரசியல் இலக்கற்ற உதிரிகளை தமிழ் பொது வேட்பாளர் என்ற போர்வையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்தே இவர்களுடைய கருத்துக்கள் அமைந்துள்ளன.

சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உங்களுக்குள் ஒற்றுமையில்லை அவ்வாறு உள்ள சூழலில் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியியுள்ளார்.

பொது வேட்பாளர்

அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய அரசியல் தரப்பின் ஒற்றுமை மீதான தென்னிலங்கையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் ஜனாதிபதியின் இந்த கேள்வி இருந்துள்ளது.

உண்மையில் ஒவ்வொரு கட்சிகளும் மக்கள் நலன்களை புறந்தள்ளி தமது சுயநலன்களை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அவர்களிடம் நிலையான கொள்கை இல்லை. ஒரு நிலையான அரசியல் இலக்கு இல்ல. மக்களுக்கான வழிகாட்டல் இல்லை என்பது விக்னேஸ்வரன் கூற்றில் இருந்து தெளிவாகப் புலப்பட்டுள்ளது.

tamil-candidate-combine-spares-strategy-election

2002 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் கண்காணிப்பாளர்களாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தென்னிலங்கையிலும் நிலைகொண்டிருந்தனர்.அதில் நோர்வேயின் மத்தியஸ்தமும் இருந்தது.

இவ்வாறிருக்க வெளிநாட்டவருக்கு எமது பிரச்சினையை காண்பிப்பதற்கு பொது வேட்பாளர் என்ற பேச்சு தமது அஸ்தமித்துப்போகும் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான ஒரு பிரயத்தனமே தவிர இதனால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை.

எனவே பொது வேட்பாளர் என்ற கருத்தானது பிரிந்திருக்கும் உதிரிகளை ஒன்றிணைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு செயற்பாடாகவே ஈ.பி.டி.பி கருதுகின்றது” என்றும் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து - 27 பேர் காயம் - 7 பேர் ஆபத்தான நிலையில்.....

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து - 27 பேர் காயம் - 7 பேர் ஆபத்தான நிலையில்.....

ரஷ்யாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த 3 பேர் கைது

ரஷ்யாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த 3 பேர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US