தாய்வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீனாவால் வலுக்கும் சர்ச்சை: செய்திகளின் தொகுப்பு
சீனா 68 இராணுவ விமானங்களையும் 10 கடற்படைக் கப்பல்களை தமது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பியதாக தாய்வான் கூறியுள்ளது.
இந்நிலையில் ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில் இரண்டாவது நாள் இராணுவப் பயிற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் தாய்வானை அதன் சொந்தப் பிரதேசமாகக் கருதும் சீனா, அதனை அடைய தமது பலத்தைப் பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளது
அந்த விமானங்களும் போர்க்கப்பல்களில் சிலவும் மேற்கு பசிபிக் பகுதிக்கு ஷான்டாங் விமானம் தாங்கி கப்பலுடன் பயிற்சியை நடத்த செல்கின்றன என்றும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை மியாகோ வழியாக சீன கப்பல்கள் அப்பகுதியை நோக்கி செல்வதை ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் அந்தப் பகுதியில் நடத்தப்படும் இராணுவப் பயிற்சிகள் குறித்து சீனா உத்தயோகப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மாலை நேர பிரதான செய்திகள்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
