தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மிக விரைவில் கொண்டுவரப்படும்: அமைச்சர் மனுஷ உறுதி

Manusha Nanayakkara Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakesh Oct 25, 2023 09:58 PM GMT
Report

மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றத்தை (Systems Change) ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டுவர நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வரலாற்றில் அதிகளவிலான சட்டவிதிமுறைகளை நிறைவேற்றும் காலமாக இக்கால கட்டத்தைக் குறிப்பிடலாம். நாட்டில் உள்ள முறைமையை மாற்ற வேண்டும் என்றே மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மிக விரைவில் கொண்டுவரப்படும்: அமைச்சர் மனுஷ உறுதி | System Change Demanded By Srilankan People

எனவே, அந்த மாற்றத்தைக் கொண்டு வரவே காலங்கடந்த சட்டங்களுக்குப் பதிலாக இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில், அதிகமான சட்ட விதிமுறைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க காத்திருக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க காத்திருக்கும் இஸ்ரேல்


அதேபோன்று, அரசு மாறும்போது மாற்றம் அடையாத, ஆளும் கட்சிகள் மாறும்போது மாற்றமடையாத, நிலையான கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகளும் தற்போது இடம்பெறுகின்றன. அதன்படி, ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு அனைத்துத் துறைகளுக்குமான கொள்கைகள் தயரிக்கப்பட்டு வருகின்றன. எமது நாட்டில் நிதி ஒழுக்கத்தை உருவாக்கினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் உட்பட வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவ முன்வருவார்கள்.

அதனாலேயே நாம் எமது நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பிலான குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை


மனித வள முகாமைத்துவம்

குறிப்பாக, முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பின் தலைமையில் அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் செலவுகள் தொடர்பிலான ஒரு ஆணைக்குழுவை நியமிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறு அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்பதை இக்குழு ஆராயும்.

எதிர்காலத்தில் இக்குழுவுக்கு பொதுமக்களும் தமது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதேபோன்று, தொழிலாளர் சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தொழில் வாய்ப்பு சட்ட மூலம் என்ற வகையில் எதிர்காலத்தில் அதனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இது பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனென்றால், மனித வள முகாமைத்துவம் என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கிளிநொச்சியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: களத்திற்கு சென்ற சுமந்திரன் (Photos)

கிளிநொச்சியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: களத்திற்கு சென்ற சுமந்திரன் (Photos)


இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக வீழ்ச்சி கண்ட தொழில் முயற்சிகளை இனங்கண்டு அவற்றை மீண்டும் மீட்டெடுக்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பணிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். மேலும், வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் மேம்பாடு, தொழில் பாதுகாப்பு உட்பட அவர்கள் நாட்டுக்கு வழங்கும் ஆதரவுக்காக, அவர்களுக்கு சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்."  என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US