இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை
காலி மாவட்டம், யக்கலமுல்லை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம் (25.10.2023) இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய எம்.நவரத்ன என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
அவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நவரத்ன, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த நபர், பாதாளக் குழுவினருடன் தொடர்புபட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
