கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய சிரிய பிரஜைகள்
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ரோமுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஏழு சிரியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும் நான்கு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்தியாவின் சென்னை நகரத்திற்கு செல்வதற்காக இன்று காலை 07.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த கடவுச்சீட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த போலி கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு தலா 2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் எழுவரும் முதலில் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
