சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் தானாக உடைப்பெடுப்பு : பிரதான வீதியின் மேலாக பாயும் வெள்ளநீர்
அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன முகத்துவாரம் ஆற்றுமுகப் பிரதேசம் தானாக உடைப்பெடுத்துள்ளதுடன் சாகாமம் நீத்தையாறுக்கு அன்மித்த பிரதான வீதியின் மேலாக வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது.
இதேநேரம் வயல்வெளிகள் யாவும் வெள்ளக்காடுபோல் காட்சியளிப்பதுடன் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் வெள்ளநீரை வெளியேறும் சின்ன முகத்துவார ஆற்றுமுகப் பிரதேசத்தை அகழ்வது தொடர்பில் பிரதேச செயலக மட்டத்தில் ஆராய்ந்துவரும் நிலையிலேயே இன்று குறித்த பகுதி தானாக உடைப்பெடுத்து வெள்ளநீர் வெளியேறி வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்த நிலை ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் களவிஜயத்தினனை மேற்கொண்டு வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை அறிந்து கொண்ட நிலையிலேயே ஆற்றுமுகப்பிரதேசம் தானாக உடைப்பெடுத்துள்ளது.
இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் இன்று மழை சற்று தணிந்துள்ள நிலையில் வீதிகள்
குடியிருப்புக்கள் எனப் பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதையும் இந்நிலை
நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
