தலையை துண்டித்து சிலையில் தொங்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - சிக்கிய பிரதான சந்தேகநபர்
அம்பலாந்தோட்டை, மாமடல ,மொகுடுயாய பகுதியில் நபரொருவரின் தலையை துண்டித்து சிலையொன்றில் தொங்கவிட்ட கொடூர சம்பவத்துடன் தொடர்புடைள பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவரையும், கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியும் மகளும் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் (Identification Parade) துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
இந்த மூன்று சந்தேகநபர்களும் ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஒய். ஆர். பி. நெலும்தெனிய முன்னிலையில் வியாழக்கிழமை (04) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோதே, சாட்சியாளர்களான மனைவியும், மகளும் அடையாளம் காட்டியுள்ளனர்.

அடையாள அணிவகுப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொலையை செய்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நான்காவது சந்தேகநபர் உட்பட கைதான நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஒய். ஆர். பி. நெலும்தெனிய உத்தரவிட்டுள்ளார்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan