கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் ஒரு நாடகமே சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிப்பு : இராசாணக்கியன்
கோட்டபாய அரசாங்கம் செயற்பட்டு வரும் நடவடிக்கைகளை பார்கும்போது அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு தொலைக்காட்சியில் நாடகம் ஒன்றை நடத்தலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரதமராக இருந்தவர் தன்னுடைய சகோதரருக்கு நிதியமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் ஓய்வு எடுப்பதாக ஒரு நாடகம் நடித்தார். அதன் பிற்பாடு அஜித் கப்ரால் அவர்கள் உலக வங்கியின் ஆணையாளராக சென்று ஏதோ தான் இந்த நாட்டை காப்பாற்ற போவதாக தெரிவித்து நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
அதன்பின் ஜெயசுந்தர செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு நாடகம் அலி சப்ரி நிதி அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு நாடகம் ஆகவே தொடர்ச்சியான நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதில் ஒரு பாகம் தான் இந்த சுசில் பிரேமஜயந்த வின் பதவி பறிப்பு என்றுதான் நான் நம்புகின்றேன் ஆகவே இனி மக்கள் ஏமாறக் கூடாது .
எதிர்வரும் காலங்களில் இந்த ராஜபக்ச குடும்பத்திற்கு சரியான ஒரு பாடத்தை தெற்கில் இருக்கின்ற மக்கள் வழங்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்.
அதே போன்று வடக்கு கிழக்கில் நாங்கள் எங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்க தயாராக
உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
