சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் அவரது மனைவி கூறும் அதிர்ச்சி தகவல்கள்..
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கும் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது என அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்கேன் பரிசோதனை
இரத்த உறைவு காரணமாக அவரது கை கடுமையாக வீங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக அவரது உடலின் மேற்பகுதி சரியாகச் செயல்படாததால் அவர் முற்றிலும் படுக்கையிலேயே முடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த இரத்த உறைதல் நிலையைக் கட்டுப்படுத்த, மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் சிறப்பு ஊசிகளைச் செலுத்தியுள்ளார்கள்.
நோய்க்கான சரியான காரணம் இன்னும் வெளிப்படவில்லை என்றும், இது குறித்து விசாரிக்க ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் மனோரி சலே ஊடகங்களிடம் மேலும் தெரிவித்தார்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri