உயர் நீதிமன்ற கருத்துக்களை புறக்கணித்த சபாநாயகர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு
உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்காது, சபாநாயகர் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கையளித்து இருக்கக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (28.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை இல்லா பிரேரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைத்துள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களில் சிலவற்றை உள்ளடக்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில். நிகழ்நிலைகாப்பு சட்டதினால் சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வரும் அனைவருக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
மேலும், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்காது, சபாநாயகர் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை கையளித்து இருக்கக் கூடாது.
இருப்பினும் அவர் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கிறார். இதன் காரணமாகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |