அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு: புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வராததன் பின்னணியிலுள்ள மர்மம்
ஈரானின் மறைந்த அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரமாண்ட 'மொசல்லா' வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ஆரம்பமாகியுள்ளன.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இறுதிச் சடங்கு
ஆயினும், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஈரானின் புதிய அதியுயர் தலைவராக நியமிக்கப்பட்ட அலி கமேனியின் மூத்த மகனான மொஜ்தபா கமேனி, இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

அவரது ஏனைய மூன்று சகோதரர்களான மசூத், மொஸ்தபா மற்றும் மீசம் ஆகியோர் இறுதிச் சடங்கில் முன்னின்ற போதிலும், மொஜ்தபா கமேனி வராதது உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தை கொல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் மொஜ்தபாவும் படுகாயமடைந்திருக்கலாம் என்ற வதந்திகள் நிலவி வரும் சூழலில், அவர் தொடர்ந்து பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பின்னணியிலுள்ள மர்மம்
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "ஈரானின் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஒரே கூண்டில் அழிக்கும் வாய்ப்பு வொஷிங்டனுக்கு இருந்தது.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்த ஆள் இல்லாமல் போய்விடும் என்பதால் அதைச் செய்யவில்லை" என சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மேலும், ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிப்பதாகவும் அவர் சாடினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், "47 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் போலிக் கண்ணீர் வடிக்க புரட்சி செய்யவில்லை, எங்களது தியாகிகளின் இரத்தம் உண்மையானது" என ஈரானியப் பெண்கள் ஆவேசமாக ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கில் கூடியிருந்த மக்கள் "ட்ரம்பைக் கொல்லுங்கள்", "நெதன்யாகுவை ஒழியுங்கள்" மற்றும் "அமெரிக்காவுக்கு மரணம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri