மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம்
உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் அர்ஜூன் ஒபேசேகர உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சசி மகேந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் கலந்துக்கொண்டார்.