முல்லைத்தீவில் மதுபான சாலைக்கு எதிர்ப்பும் ஆதரவும்
முல்லைத்தீவில் அமைக்கப்படவுள்ள மதுபான சாலை ஒன்றினை அகற்ற கோரி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதேவேளை ஆதரவு தெரிவித்து மாவட்ட செயலாளருக்கு மனுக்கொடுக்கவுள்ளதாக ஒரு பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று (15.08.2023) ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கிராம மக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கு அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை (16.08.2023)ஆம் திகதி வழங்கியுள்ளார்கள்.
மீறப்படும் விதிமுறைகள்
கடிதம் வழங்கப்பட்டு இதுவரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறித்த கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மதுபானசாலை அமையப்பெறும் இடத்திற்கு 100மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலைகளோ, தேவாலயங்கள், ஆலயங்கள் இருக்க கூடாது என்பது விதிமுறையாக இருக்கின்ற போதும் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் கிராமத்தில் பாடசாலை அருகிலிருப்பதனால் பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலையும், பாடசாலை இடைவிலகும் நிலையும் உருவாகும் என குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகவிலையில் மதுபானங்கள் விற்பனை செய்து நாளாந்தம் கூலி தொழில் செய்யும் வறிய
மக்களின் பணத்தினை விழுங்கி வருகின்றார்கள்
இவ்வாறு மக்களின் பணத்தினை விழுங்கும் கோட்டல்களுக்கு பின்னால் அரசியல்
வாதிகள் சிலர் செயற்பட்டு மலிவான விலையில் விற்கும் மதுபானகடையினை அகற்ற
மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய முற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.



