ஊடகவியலாளர் பிரகாஷின் திருவுருவப்படத்துக்கு சுமந்திரன், சாணக்கியன் அஞ்சலி
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி அண்மையில் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் திருவுருவப்படத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் இன்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள பிரகாஷின் வீட்டுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளனர்.
மாற்றுத்திறனாளியான இளம் ஊடகவியலாளர் பிரகாஷ் தசையழிவு நோய்த்தாக்கத்தால் சக்கரநாற்காலியின் துணையோடு இயங்கிய நிலையிலும், தனது திறமையாலும் எழுத்தாற்றலாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
