அமைச்சரவைப் பட்டியலில் சுமந்திரன் - சாணக்கியன்! விஸ்வரூபம் எனும் தென்னிலங்கை (Video)
இலங்கையில் பிரதமர் தெரிவு மற்றும் அதனோடு இணைந்த மந்திரிசபை தெரிவு என்பது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால்தான் மேற்கொள்ளப்படுகின்றது.
தங்களோடு இணங்கக்கூடிய மகிந்த ராஜபக்சவை காப்பாற்றக்கூடிய ஒருவரையே தெரிவு செய்வார். இதனை நியாயப்படுத்தக்கூடிய காரணங்களையும் அவர்கள் கூறுவார்கள் என அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் தலைமையிலான அமைச்சரவையிவ் எம். ஏ. சுமந்திரனுக்கு நீதி அமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. அத்துடன் பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேக்கா வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதேநேரம் வட மாகாண அபிவிருத்தி அமைச்சராக சாணக்கியணை தெரிவு செய்வதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.