தையிட்டியில் தலைமறைவான தமிழரசுக் கட்சி தலைமைப்பதவிக்கு அடிபடுவது ஏன்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று நியமிக்கப்பட்டமை பல தரப்பகளில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பில் அரசியல் தரப்புகளில் இருந்து சாதக பாதக கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, அண்மையில் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,