கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர் திடீர் மரணம்
வலப்பனை, உக்குதுலே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து 20 நாட்களின் பின்னர் வீடு திரும்பியவர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய குறித்த நபர் கோவிட் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.
அதற்கமைய அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிகிச்சை பின்னர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்றவில்லை என சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டது. எனினும் வைத்தியசாலையில் வீடு திரும்பிய தினத்தன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு செய்யப்படும் இறுதி அஞ்சலி நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri