கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர் திடீர் மரணம்
வலப்பனை, உக்குதுலே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து 20 நாட்களின் பின்னர் வீடு திரும்பியவர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய குறித்த நபர் கோவிட் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.
அதற்கமைய அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிகிச்சை பின்னர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்றவில்லை என சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டது. எனினும் வைத்தியசாலையில் வீடு திரும்பிய தினத்தன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு செய்யப்படும் இறுதி அஞ்சலி நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
