எல்லவில் சுற்றுலா பயணி திடீர் மரணம்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
எல்ல மலைப் பகுதியில் நடை பயணம் செய்து தனது மகளின் 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பிரித்தானிய பிரஜையின் மரணம் திடீர் மாரடைப்பால் ஏற்பட்டது என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் ஓக்பாத்தைச் சேர்ந்த 63 வயதான பிரட் மக்லீன் என்ற பிரித்தானிய பிரஜை, தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடிய வேளை எல்லவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் கடந்த 16 ஆம் திகதி தனது மகள் நடாலி அன்னேவுடன் நாட்டுக்கு வருகை தந்து வெலிகமவில் தங்கியிருந்தார். பின்னர் இருவரும் 23 ஆம் திகதி எல்லவுக்குச் சென்று ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை
இந்நிலையிலேயே, அவர் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதிவான் கெமுனு சந்திரசேகர, நீதிவான் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் திடீர் மாரடைப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan