நீலகாமம் பிரகடனம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு.. மனோ கணேசன் முன்வைத்துள்ள கோரிக்கை
நாம் நீலகாமம் பிரகடனத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று சபையில் சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இதனை சமர்ப்பித்தார்.
நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் அறவழிப் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிரூபிக்க தவறிய பெரும்பான்மை - ஒத்திவைக்கப்பட்ட தவெக தலைவர் விஜயின் பதவியேற்பு.! குழப்பத்தில் தமிழக அரசியல்
மக்களுக்கு நீதி..
இதன்போது, "இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படையை உருவாக்க முடியாது. அது தடை செய்யப்பட வேண்டும்.

தோட்டங்களில் பயிரிடப்படாத தரிசு நிலங்களில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்" என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
மேலும், மலையக மக்களுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறும் அவர் இடித்துரைத்தார்.
மலையக மக்களுக்குக் காணி உரிமை தராமல், ஏனையோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமானால் தமிழ் முற்போக்குக் கூட்டணி நிச்சயம் போராடும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.
பிரதியமைச்சரின் பதில்
இதனை தொடர்ந்து கருத்த தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, "நீலகாமம் பிரச்சினையைத் தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்குப் புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்." மனோ கணேசனிடம் வலியுறுத்தினார்.

மேலும், "நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் சபையில் கருத்து வெளியிட்டிருந்தார். அரசே முன்னின்று, அரசின் அனுமதியுடனேயே இது (தாக்குதல்) நடத்தப்பட்டது என்பதையே அவர் (மனோ கணேசன்) கூற முற்படுகின்றார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும்.
தேசிய மக்கள் சக்தி அரசு இந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுகின்றது என்பதும் மக்களுக்குத் தெரியும். போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்துவதை நிறுத்துங்கள்.
உங்களது அரசுதான் (ஐ.தே.க.) 1983 களில் தோட்டங்களை எரித்தது. கைதுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் குறைகூறவே இவர்கள் (எதிரணி) முயற்சிக்கின்றனர்.
மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. மே தினத்தைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாத அந்த நபர்களுக்கு (மலையக கட்சிகள்) அரசை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை." - என்றார் பிரதி அமைச்சர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி, "பிரதி அமைச்சர் இங்கு பொய்யுரைக்கின்றார். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அரசைத் தொடர்பு படுத்தவே இல்லை. அவர் தாமாகுவே தொப்பியைப் போட்டுக்கொள்கின்றார். விசர்த்தனமாக கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்." என்றார்.