இலங்கையில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரோனின் உப திரிபுகள்
ஒமிக்ரோனின் உப திரிபுகள் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் பெருந்தொற்றின் திரிபான ஒமிக்ரோன் மிக வேகமாக பரவும் திரிபாக காணப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் ஒமிக்ரோனின் உப திரிபுகள் பரவி வருவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 75 ஒமிக்ரோன் தொற்று உறுதியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமகம, கடுகொட, கொஸ்கம, மெதபாத, பாதுக்க, பாரகடுவ மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில் ஒமிக்ரோன் திரிபுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலப் பகுதியில் 5391 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளடன், 87 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
