யாழ்.பல்கலையில் இடிக்கப்பட்ட தூபியை மீள் கட்டுமானம் செய்வதில் மாணவர்கள் தீவிரம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுதூபியை மீள்நிர்மாணம் செய்வதில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவு தூபியானது பல்வேறு போராட்டங்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டங்களின் பின்னர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரினால் கடந்த 11.01.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு மீண்டும் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி மீள் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மாணவர்களினால் புதிய தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மிக விரைவில் குறித்த தூபி கட்டுமானப்பணிகள் முடிவுறுத்தப்படும் என மாணவர் ஒன்றியம் ஊடகங்களிடம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.