இளம் சமூகத்தை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பில் மாணவர்களால் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி
அதிகரித்துவரும் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று (15)மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடாத்தப்பட்டது.
மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
பாடசாலையின் மாணவர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோரின் ஏற்பாட்டிலும் பங்குபற்றுதலுடனும் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கு.பாஸ்கரன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் இந்த சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையில் ஆரம்பித்த சைக்கிள் பவனியானது சவுக்கடி வீதி,விநாயகபுரம் வீதி,முருகன்கோவில் வீதி சென்று ஜனாதிபதி வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளம்வயதினர் தவறான முடிவெடுத்து உயிரிழக்கின்றமை குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடாத்தப்பட்ட இந்த சைக்கிள் பவனியின்போது தற்கொலைகளை தடுப்பது குறித்தான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.





புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
