15 வயதான மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பு
பண்டாரதுவ, மாயதுன்ன பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவன் தனது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
15 வயதுடைய இந்த மாணவன் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவனின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam