யாழ். மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் (Photos)
யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (14.12.2023) மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி நுழைந்த இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம்
அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி கோரியும் இனிமேல் இவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடாது என்றும் மாணவர்கள் சுமூகமாக கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு போராட்டகாரர்களால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
