கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் நேற்று இரவு ஏற்பட்ட நிலையில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மன அழுத்தம்
உயிரிழந்தவர் பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுமி மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமி அந்த மாடியில் உள்ள பெல்கனியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை கண்டறிய பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்