இலங்கையில் பல இடங்களில் எரிபொருள் கோரி பணிபகிஸ்கரிப்பு போராட்டம் (Photo)
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிப்பொருள் தட்டுபாடு காரணமாக நாட்டில் பல இடங்களில் ஊழியர்களால் பல இடங்களில் இன்று (13) பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலை சாலை ஊழியர்கள் தங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று (13) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய சேவையாளர் எமக்கு எரிபொருள் எங்கே? எரிபொருள் கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்தம்.அதிகாலையில் பணிக்கு வந்து இரவிலே வீடு செல்லும் நாங்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வது எவ்வாறு?வழங்கு ..வழங்கு!எமக்கு எரிபொருள் வழங்கு.போன்ற பதாதைகளை ஏந்தியவாறு திருகோணமலை போக்குவரத்து சபை ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் கோரி இன்று (13) பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் தனியார் பேருந்து சேவை, மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்கும் இடையில் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக மன்னார் போக்குவரத்து சாலை தனியார் பேருந்துகளுக்கு வழங்க வேண்டிய டீசலை வழங்காத நிலையில் நேற்றைய தினம்(12) வீதிகளை மறித்து மன்னார் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பிரச்சினையில் தலையிட்டு நேற்றைய தினம் மாலை 13,200 லீட்டர் டீசல் மன்னார் சாலைக்கு வழங்கிய நிலையில் மாவட்ட செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 5000 லீட்டர் டீசல் மன்னார் தனியார் சேவையினருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் அரச பேரூந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்ததுடன் அதிகளவான மக்களுடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தனியார் பேரூந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று மன்னார் போக்குவரத்து சாலையில் தனியார் பேரூந்துகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து நாளைய தினம் தனியார் பேரூந்து வழமை போன்று சேவைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





