பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இரண்டாவது நாளான இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் வழங்கப்படாமையால் கடமைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரியும், அத்தோடு அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்குள் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உள்வாங்குமாறு கோரியும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பிரச்சினைகள்

அந்த வகையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி திணைக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டாவது நாளாகவும் கடமைக்கு சமூகம் வழங்காத நிலையில் சமுர்த்தி வங்கிகள், சமுர்த்தி மகாசங்கத்தின் கிளைகள் என்பன மூடிக் காணப்படுகன்றன.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாததால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விஷேட கொடுப்பனவு வழங்குவதிலும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan