சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துங்கள்-அனுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ச அரசாங்கமும் முன்னெடுத்து வரும் ஜனநாயக விரோத அடக்குமுறை செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக தேடிய அறிய நேற்று மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில்

உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில். வெளியில் இருக்க வேண்டியவர் உள்ளே இருக்கின்றனர்.இது மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டம்.எவரும் சீர்குலைக்கும் வகையில் நடந்துக்கொள்ளவில்லை.
ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சவினரும் நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக குழித்தோண்டி புதைத்து அச்சத்தில் பதுங்குகுழிகளில் வாழும் தலைவர்களாக மாறவே திட்டங்களை வகுத்துள்ளனர்.
இதனால், மிக மோசமான, ஜனநாயக விரோத சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கும் கூறுகிறோம்.
ஓடி ஒழிய இடங்களை தேடிக்கொள்ளுங்கள்

விக்ரமசிங்கவினர் இன்று இதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் கொழும்புக்கு வரப்போகும் லட்சக்கணக்கானவர்களை தடுத்து நிறுத்த முடியாது. 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5
பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.
இதனால், மக்களுக்கு அஞ்சி ஒழியும் இடங்களை தேடிக்கொள்ளுமாறு ரணிலுக்கும் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் நாங்கள் கூறுகிறோம். இதனால் உடனடியாக அடக்குதுறை நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறுகிறோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri