தமிழர் பகுதியில் வலுக்கட்டாயமாக அமரும் புத்தர்: நாடாளுமன்றில் காட்டம் (video)
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் மிக நீண்டகால யுத்தத்தை சந்தித்தவர்கள், அவர்களின் நிலங்கள் இன்றும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21.03.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை புத்த விகாரை என பறிக்க முயற்சிக்கின்றார்கள்.
நில அபகரிப்பு
இந்நிலையில் நாவற்குழியில் சிங்கள மக்கள் ஒருவரைகூட காண கிடைக்காது ஆனால் தற்போது அங்கு ஒரு விகாரையை அமைத்து கடந்த வாரம் சவேந்திர சில்வா வருகை தந்து கோபுரம் வைக்கின்றார்.
அதேவேளை மயிலிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து விகாரைகளை அமைக்கின்றனர்.
தமிழருடைய பகுதிகளான வெடுக்குநாரி மலை, குருந்தூர்மலை, உருத்திரபுரம் சிவன் கோவில், நிலாவரை நல்ல தண்ணி கிணறு போன்ற இடங்களில் வலுக்கட்டாயமாக புத்தர் சென்று அமருகின்றார்.
அந்த நிலங்கள் பறிக்கப்படுகின்றது. தொல்லியல் திணைக்களத்தினூடாக மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
