பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி சுற்றுக்கு இலங்கை வீரர் தெரிவு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பேர்மிங்காமில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இலங்கை நேரப்படி புதன்கிழமை (03) இரவு 11.40 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது அரையிறுதிப் போட்டியில் 10.20 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்த 27 வயதான ஓட்டப்பந்தய வீரர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இறுதிப்போட்டிகள்
கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா (10.02), தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் (10.07), இங்கிலாந்தின் நெதனீல் மிட்செல்-பிளேக் (10.13), கெமரூனின் இம்மானுவேல் எஸேம் (10.14), வேல்ஸின் ஜெர்மியா அசு (10.15), அவுஸ்திரேலியாவின் ரோஹன் பிரவுனிங்17 (10.15), ரோஹன் பிரவுனிங்.7 (10.18) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.00 மணிக்கு நடைபெறும். நேற்று செவ்வாய்க்கிழமை (02), அபேகோன் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஆடவர் நிகழ்வின் முதல் சுற்றின் எண் 06 இல் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்கு அவர் 10.06 வினாடிகளில் ஓடித் தகுதி பெற்றார்.