இலங்கையில் மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தம்
இலங்கையில் தரக் குறைபாடுகள் காரணமாக, கடந்த ஆண்டு 349 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்கள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் கண்டறிந்துள்ளது.
அதே காரணத்திற்காக 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டன.
தடுப்பூசிகள்
இதற்கிடையில் கடந்த ஆண்டு 10.73 பில்லியன் மதிப்புள்ள கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசிகளில் 56 சதவீதமானவை, ஜூலை 2022க்குள் பயன்படுத்தப்படாமல் காலாவதியாகிவிட்டன. எனவே அவையும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.

உலக வங்கியின் அவசரகால பராமரிப்பு மற்றும் சுகாதார திட்ட கடன் மூலம் நிதியளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இதில் அடங்கியிருந்தன.
சுகாதார அமைச்சின் தகவல்படி. 16 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளில் 56 சதவீதமானவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam