உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை குழுவினர் அம்பாறை பயணம் (Photos)
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சட்டமா அதிபர் திணைக்கள பொலிஸார் ஜெனரல் கருப்பிரியா ஜெயசுந்தர தலைமையிலான சட்டத்தரணிகள் குழு பயணம் செய்துள்ளனர்.
வியாழக்கிழமை (29.12.2022) மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் சாய்தமருது பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடி விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கினையடுத்து, தாக்குல்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக சட்டமா அதிபர் திணைக்கள செலிஸ்ரர் ஜெனரல் தலைமையிலான குழுவினர் கிழக்கிற்கு பயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புக்கு மத்தியில் முதலில் அம்பாறை சாய்தமருது வெரியேரியன் சுனாமி வீடமைப்பு திட்டத்தில் சகரான் குழுவினர் பதுங்கியிருந்து தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய வீட்டை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஆவணங்களை பார்வையிட்டு விசாரணை
இதன்போது சம்பவ காலத்தில் விசாரணைகளை மேற்கொண்டு பதிவேட்டில் ஆவணங்களை
தயாரித்த அந்தந்த பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள், தடவியல்
பிரிவு பொலிஸார் சம்பவ இடங்களுக்கு அவணங்களுடன் வரவழைக்கப்பட்டு ஆவணங்களை
பார்வையிட்டு சவிசாரணைகளை மேற்கொண்டனர்.



