272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
லண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த சம்பவம் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தொழில்நுட்பக்கோளாறு
இதன்பின்னர் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியன்னாவில் இருந்து புறப்படத் தாமதமாகியுள்ளது.
இந்நிலையில், விமானம் புறப்படும் வரை ஐரோப்பாவுக்கான வீசாவை பெற்றிருந்த அனைத்து பயணிகளையும் வியன்னா நகரில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து விமானம் நேற்று (2) லண்டன் நேரப்படி 21:30 மணி நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
