பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டு, பிராந்திய பதற்றம் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மோதல் மண்டலங்களைத் தவிர்ப்பதற்காக, லண்டன் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் மாற்றுப் பாதைகளைப் பின்பற்றும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (13) வெளியிட்ட அதிகார பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்பு கொள்ளுமாறு
"இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான எங்கள் சேவைகளில் விமான கால அளவை அதிகரிக்க வழிவகுத்தன" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்று வழித்தடத்தின் ஒரு பகுதியாக, லண்டனில் இருந்து கொழும்புக்குச் சென்ற UL504 விமானம் இன்று அதிகாலை எரிபொருள் நிரப்புவதற்காக டோஹாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதேபோல், கொழும்பிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் UL501 விமானம் தடைசெய்யப்பட்ட வான்வெளியைத் தவிர்த்து திருப்பி விடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாற்றங்களை விமான நிறுவனம் செயல்படுத்தும்போது பயணிகள் புரிந்துகொண்டு பொறுமையாக இருக்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பயணிகள் பின்வரும் வழிகள் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்
Hotline(இலங்கைக்குள்): 1979 • சர்வதேசம்: +94 11 777 1979
• வாட்ஸ்அப் (chat only) : +94 74 444 1979
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
