இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு! மூடிஸ் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு இன்னும் குறைவாகவே இருப்பதாக "மூடிஸ்" முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் , "மூடிஸ்", செப்டம்பர் 10ஆம் திகதி அன்று, இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு நிலை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2021, ஆகஸ்ட் இறுதியில் இலங்கையின் அந்நிய செலவாணி இருப்பு, 3 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது இந்த ஆண்டின் தொடக்கத்தை விட 43% குறைவானதாகும்.
அத்துடன் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 600 மில்லியன் டொலர் குறைவானது என்று "மூடிஸ்" குறிப்பிட்டுள்ளது
இந்தநிலையில், 2025 வரை அரசாங்கத்தின் வருடாந்த வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துகை குறைந்தது 4 முதல் 5 பில்லியன் டொலர்கள் என "மூடிஸ்" குறிப்பிட்டுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறையும் என்றும் "மூடிஸ்" தெரிவித்துள்ளது.
சர்வதேச சுற்றுலா மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் கடன் அல்லாத வரவுகள் விரைவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், அரசாங்கத்தின் வரிச்சலுகை மற்றும் தற்போதைய முடக்கல் காரணமாக, மேலும் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் "மூடிஸ்' முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam