இந்தியாவுக்கான சந்தையை திறக்க இலங்கை தயாராக உள்ளது : இந்தியாவில் அநுர
இலங்கை(Sri lanka), வணிகங்களுக்கு உகந்ததாகவும் திறமையானதுமான நாடாக மாறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை வணிக மன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான சந்தையைத் திறக்க இலங்கை தயாராக உள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம்
இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பில், எதிர்வரும் ஆண்டுகளில் புதிய அரசாங்கம் முன்னுரிமைகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியாவின் முதலீட்டை இலங்கை வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப துறையில், இந்தியாவின் வலிமையைப் பற்றிப் பேசிய அவர், இலங்கையின் தொழில்நுட்ப துறையில் இந்திய முதலீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என்றும், இந்தியா இலங்கையுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்படும் என்றும் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
