இலங்கையில் 70 சத வீதமானோருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சு
இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 சத வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
20-29 வயதானவர்களில் 60 சத வீதமானோருக்கும், 15-19 வயதானவர்களில் 32 சத வீதமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த சனதொகையான 2 இரண்டு கோடியே 86 லட்சம் மக்களில், கோடியே 33 லட்சம் மக்களுக்கு முழுமையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.