விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்து அரசியல் செய்யும் இனவாதிகள்! சமூக ஆர்வலர் ஆதங்கம்
இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மதவாதிகள் தங்கள் அதிகாரத்தை இழக்கும் ஒவ்வொரு முறையும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக பொய்களைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர் சிரிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமையை அழிக்க பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி இன்று பொலிஸ் முறையாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நினைவு கூர்வது தவறல்ல
“இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மத வெறியர்கள் வெள்ளவத்தை கடற்கரையில் உறவினர்களுக்காக நடத்திய நினைவு நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர்.
அங்கு சென்றவர்களின் குடும்பத்தின் ஒரு உறவினர் போரின் போது இறந்திருக்கலாம். அவர்களை நினைவு கூறுவது தவறல்ல, ஒரு உறவினரை இழந்ததன் வலி குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
எனவே, சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையில் தமது உறவுகளை போரில் இழந்தவர்களால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இது விடுதலைப் புலிகளை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது.
இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிப்புறும் இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
