சீனி வரி குறைப்பால் அரசு இழந்த 15.5 பில்லியன் ரூபாயை மீள அறவிடுமாறு பரிந்துரை
இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரி குறைக்கப்பட்டதன் காரணமாக அரசு இழந்த வரி வருமானத்தை, வரி குறைப்பின் மூலம் இலாபத்தை பெற்றுக்கொண்வர்களிடம் மீண்டும் அறவிட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காய்வு ஆணைக்குழு ஆகியன அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளன.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் விசேட வணிக வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் நுகர்வோருக்கு கிடைக்காமல் போனது தொடர்பான தேசிய கணக்காய்வு ஆணைக்குழு நடத்திய கணக்காய்வுக்கு அமைய அந்த பரிந்துரையை வழங்குவதாக அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் விசேட வணிக வரியை அரசாங்கம் கடந்த 2020 ஆம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி 25 சதமாக குறைத்தது.
இந்த விசேட வணிக வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி வரையான நான்கு மாத காலத்திற்குள் மாத்திரம் அரசுக்கு 16 ஆயிரத்து 763 மில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வில் கண்டறியப்பட்டது.
இந்த குறுகிய காலப் பகுதியில் இலங்கை சதோச நிறுவனம் அவ்வப்போது தனியார் இறக்குமதியாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு சீனியை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் அந்த நிறுவனம் சுமார் 102 மில்லியன் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான சில மாதங்களில் மாத்திரம் பிரமீட் வில்மா என்ற நிறுவனத்தின் சீனி இறக்குமதியானது அசாதாரணமக 1222 வீதமாக அதிகரித்தது.
நுகர்வோருக்கு நிவாரணத்தை வழங்கும் எதிர்பார்ப்பில் அரசாங்கம் சீனி இறக்குமதி வரியை குறைத்த போதிலும் அந்த நோக்கம் நிறைவேறாது, இறக்குமதியாளர் மற்றும் சில வர்த்தகர்கள் மாத்திரம் பொருளாதார நன்மையை பெற்றுக்கொண்டுள்ளதாக தேசிய கண்காய்வு ஆணைக்குழு கண்டறிந்தது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 1 மணி நேரம் முன்

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022