எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் கையிருப்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், மக்கள் தேவையற்ற வகையில் அச்சப்பட வேண்டாம் என்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பக வளாகம் நேற்றும் (28) இன்றும் (29) மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் வரிசைகள் ஏற்படலாம் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு தேவையான எரிபொருள்
ஞாயிற்றுக்கிழமை (28ஆம் திகதி) திங்கட்கிழமை (29ஆம் திகதி) ஆகிய இரண்டு நாட்களுக்கு தேவையான எரிபொருள் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை வெளியிடப்பட்டதாக சங்கம் கூறியுள்ளது.
அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட பெருமளவான எரிபொருள் கையிருப்பு நேற்று (28) மாலையுடன் தீர்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பொசன் பௌர்ணமி தினத்தில் மக்கள் அதிகளவு போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இதற்கு காரணம் எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு எரிபொருள் வெளியீட்டை இடைநிறுத்துவதன் மூலம் தேவையற்ற வரிசைகளை உருவாக்கி எரிபொருளை பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் நெரிசல்
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (29ம் திகதி) வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு போதிய எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை அதாவது 30ஆம் திகதி முதல் மீண்டும் எரிபொருள் விடுவிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் எரிபொருளை பெறுவதற்கு சற்று நெரிசல் ஏற்படக்கூடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு எரிபொருள் வெளியிடப்படுவதில்லை எனவும், அது சாதாரண நிகழ்வு என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார விளக்கமளித்துள்ளார்.
எனவே எரிபொருள் கையிருப்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam