எரிபொருள் நெருக்கடியினால் கடமைக்கு வருகை தராத வைத்தியர்! கர்ப்பிணி தாய்மார்கள் அவதி
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வராததால் சிகிச்சைக்காக வருகை தந்த கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களை பார்வையிடும் தினமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் வந்து வெகு நேரமாக காத்திருந்த நிலையிலும் பார்வையிடுவதற்காக ஆரம்ப வைத்தியசாலையில் வைத்தியர் வரவில்லை என கூறப்படுகின்றது.
பொருளாதாரம் நெருக்கடி
தற்போதைய பொருளாதாரம் நெருக்கடியில் கர்ப்பிணி தாய்மார்கள் முச்சக்கர வண்டிக்கு பணம்கொடுத்து குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்தும் அங்கு வைத்தியர் இல்லாமை தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வைத்திய சாலையில் சுழற்சி முறையில் வைத்தியர் ஒருவர் பார்வையிடுவதாகவும் வைத்தியர் வராமை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam