எரிபொருள் நெருக்கடியினால் கடமைக்கு வருகை தராத வைத்தியர்! கர்ப்பிணி தாய்மார்கள் அவதி
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வராததால் சிகிச்சைக்காக வருகை தந்த கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களை பார்வையிடும் தினமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் வந்து வெகு நேரமாக காத்திருந்த நிலையிலும் பார்வையிடுவதற்காக ஆரம்ப வைத்தியசாலையில் வைத்தியர் வரவில்லை என கூறப்படுகின்றது.
பொருளாதாரம் நெருக்கடி
தற்போதைய பொருளாதாரம் நெருக்கடியில் கர்ப்பிணி தாய்மார்கள் முச்சக்கர வண்டிக்கு பணம்கொடுத்து குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்தும் அங்கு வைத்தியர் இல்லாமை தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வைத்திய சாலையில் சுழற்சி முறையில் வைத்தியர் ஒருவர் பார்வையிடுவதாகவும் வைத்தியர் வராமை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
எனக்கு நயன்தாரா வேணும்...சிஎம் கொடுப்பாரா?.. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri