கறுப்பு சந்தை வர்த்தகத்தினால் மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு மறுக்கப்பட்டுள்ள முன்னுரிமை நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைப்பணியாளர்களின் வருகை வீழ்ச்சி
இதன் காரணமாக பல மணிநேரம் வீதிகளில் எரிபொருளுக்காக காத்திருந்து வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைப் பணியாளர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் எனவும்,அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
கறுப்புச் சந்தையில் அதிகரிக்கும் எரிபொருள் வர்த்தகம்
மேலும், கறுப்புச் சந்தையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மோசடிகாரர்கள் எரிபொருட்களை பதுக்கி வைப்பதால் இந்த மோசமான நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்று செய்றபடும் குறித்த நபர்களுக்கு எதிராக பொலிஸாரும், இராணுவத்தினரும் மௌனம் சாதிப்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"எரிபொருள் மாஃபியாக்கள் எரிபொருளை சேகரித்து ஒரு லீற்றர் பெட்ரோலை 650 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 550 ரூபாவுக்கும் விற்கின்றமையினால், அத்தியாவசிய சேவையான சுகாதார சேவைப் பிரிவினருக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த மோசடிக்காரர்களால் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022