சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! தலைமை பீடாதிபதிகளின் ஆசியுடன் உதயமாகும் சர்வகட்சி அரசாங்கம்
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் தற்போதைய அரசாங்கம் நீக்கப்பட்டு விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருதெனிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் வீதியில் இறங்கி போராடும் மோசமான நிலை
நாட்டின் நிலைமை தற்போது மக்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளமையால் தலைமை பீடாதிபதிகளின் ஆசியுடன் அனைத்துக் கட்சி ஆட்சியை விரைவில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு கட்சி ஆட்சியை அமைக்காவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடி நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan